

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் தனது 70-வது பிறந்தநாளை 70 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டாடினார்.
இதையடுத்து, இன்று காலை லல்லுவை வாழ்த்த ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரது இல்லத்தில் குவிந்திருந்த வேளையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்துக்கு இடையில் அரசியலில் இவ்வளவு பெரியநிலையை எட்டியுள்ள லல்லுவின் வாழ்க்கை ஆச்சரியப்பட வைப்பதாக தெரிவித்த நிதிஷ்குமார், அரசியலில் அவர் இன்னும் உயர்வான நிலையை அடைய வேண்டும் என இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டார்.