

ஜெய்பூர்:
ராஜஸ்தானில் இயங்கிவரும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான அரசு விடுமுறைகளுக்கான புதிய அட்டவணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அந்த புதிய அட்டவணையில் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்திக்கு) விடுமுறை அளிக்கப்படவில்லை. இந்த புதிய அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தி அன்று மத்திய அரசு விடுமுறையாகும். அந்த விடுமுறையை ராஜஸ்தான் மாநில அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.