இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறி வருகின்றனர். மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. #WIvsSL #TestSeries
இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
Published on

பார்படாஸ்:

வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.

வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஷேன் டாவ்ரிச் 36 ரன்களும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். 

இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், கச்ன் ரஜிதா ஆகியொர் 2 விக்கெட்டும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். #WIvsSL #TestSeries

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com