மும்பையில் மீண்டும் கனமழை - வெள்ளத்தில் மிதப்பதால் போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிராவில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் முக்கிய ரெயில் நிலையங்கள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த தண்டவாளம்
வெள்ளம் சூழ்ந்த தண்டவாளம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கனமழை 

பலத்த மழையால் மும்பையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சயான், கோரேகோன், கல்யாண் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

மழையின் காரணமாக மத்திய ரெயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால் புறநகர் ரெயில்கள் தாமதமாக சென்றன. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மழையின் காரணமாக ரெயில்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் கவனமாக இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கனமழையால் கடல்சீற்றம் ஏற்படும். அதனால் கடற்கரை பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com