

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, சீக்கியர்கள் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர்.
சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.