புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 9 பேர் ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விலகலால் விரக்தியடைந்த புதுக்கோட்டை நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ்
Published on

புதுக்கோட்டை:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் பதவியில் தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ராஜினாமாவை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது பதவியையும் ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை நகர தலைவர் இப்ராஹிம் பாபு தலைமையில் நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com