ஆசிரியர் தினம்-விளையாட்டு தினம் கொண்டாட்டம்

முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.
முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனரும், முதல்வருமான சரோஜாபாபு தலைமை தாங்கினார்.

துணை முதல்வர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னர்களாக ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் இயக்குனர் வெற்றிச்செல்வன், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.

மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

தொடர்ந்து மாண வர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com