புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னருக்கு மாணவர் மற் றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசால் சென்டாக் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.25 லட்ச மும், பொறியியல் படிப்புக்கு ரூ.25 ஆயிரமும், செவிலியர் படிப்புக்கு ரூ.16 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழு கட்டணமும் செலுத் தப்படுகிறது. 2023-24-ம் ஆண்டுக்கான உயர்க்கல்வி கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி யில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடைமருத்துவம், செவிலியர் மற் றும் பிற படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் முழுகல்வி கட் ட்ணமும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், புதுவை அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 10 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட் டணத்தை முழுவதுமாக அரசே செலுத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ் வாறு அதில் கூறியுள்ளார்.