

புதுவை வில்லியனூர் தொகுதி தவெக தலைமை நிர்வாகி பிரபு மகள் சவுமியாவிற்கும், கடலூரைச் சேர்ந்த அருண்குமாருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து திருமண நாளும் குறிக்கப்பட்டது.
தனது மகள் திருமணத்தில் பங்கேற்க வருமாறு த.வெ.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜயை சந்தித்து பிரபு திருமண அழைப்பிதழ் அளித்தார்.
ஆனால், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தொடர் அரசு பணியால் மற்றும் அரசியல் காரணங்களாலும் திட்டமிட்டபடி அவரால் பிரபு மகள் திருமண விழாவில் நேரில் பங்கேற்க முடியாமல் போனது.
இதனால் திருமணத்தன்று மணமேடையில் தமிழக முதல்-அமைச்சர் விஜயின் பிரம்மாண்ட புகைப்படம் ஒன்றை வைத்தனர். மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டும்போதும், பின்னணியில் வேத மந்திரங்கள் முழங்க, கெட்டி மேளம் கொட்ட... ஒட்டுமொத்த நிகழ்வும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் படத்தின் முன்னிலையில அரங்கேறியது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.