3½ ஆண்டுக்கு பிறகு முழுநேர கவர்னர்

புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.
3½ ஆண்டுக்கு பிறகு முழுநேர கவர்னர்
Published on

2016-ம் ஆண்டு மே 29-ந் தேதி புதுச்சேரி மாநில கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். ஹெல்மெட் கட்டாயம், 2 சக்கர வானங்களில் 2 பேர் தான் செல்ல வேண்டும். சிறுவர்களை ஏற்றி சென்றாலும் இறக்கி விட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் முடக்கம் என்பது உள்பட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு சென்றது.

குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் இவரை மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நீக்கியது. தொடர்ந்து தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவர்னர் பதவியை கடந்த மார்ச் 18-ந் தேதி தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். மார்ச் 23-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். கிரண்பேடிக்கு பிறகு கிட்டத்திட்ட 3 ஆண்டுகள் 5 மாதத்துக்கு பிறகு தற்போது 'தான் முழுநேர கவர்னர் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com