புதுவையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி

புதுவையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பரிதாபமாக இறந்து போனார்.
புதுவையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி
Published on

புதுச்சேரி:

திருவண்ணாமலை மாவட்டம் நுங்கம்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். (வயது 50). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று சேகர் சேதராப்பட்டு- புதுவை பஸ்சில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது மறைமலை அடிகள் சாலையில் பஸ் சென்ற போது டிரைவர் ‘திடீர் பிரேக்’ போட்டார். இதில் சேகர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com