ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம்
ஜெயலலிதா நினைவிடம்
Published on

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நினைவிடம் கட்டப்பட்டு கடந்த 27-ந்தேதி திறக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

அன்றைய தினத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்த்து வந்தனர். இந்த நிலையில், இன்று இரவு 8 மணியளவில் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com