8 வழிச்சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்ய கூடாது - சென்னை ஐகோர்ட்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemExpressway #MadrasHC
8 வழிச்சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்ய கூடாது - சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அமைதியான முறையில் சாலைக்கு எதிராக கையெழுத்து பெற்றவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியது.

ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராடத்தை முன்னெடுக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்ற ஐகோர்ட்டு, அமைதியை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் யார் என்பதை அடையாளம் காணவேண்டும் என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com