பொத்தேரி ரெயில்நிலையம் அருகே கொலையுண்ட பெண் வேலூரை சேர்ந்தவர்

பொத்தேரி ரெயில் நிலையம் அருகே கொலையுண்ட பெண் வேலூரைச் சேர்ந்தவர் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொத்தேரி ரெயில்நிலையம் அருகே கொலையுண்ட பெண் வேலூரை சேர்ந்தவர்
Published on

செங்கல்பட்டு:

பொத்தேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டியுள்ள முட்புதரில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மறைமலைநகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்ட பெண் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஷாஜிதா (30) என்பது தெரிந்தது.

அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

ஷாஜிதா வேலூரில் இருந்து பொத்தேரி வந்தது எதற்காக? அவருடன் வந்தவர்கள் யார்? யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com