போரூரில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலி

போரூரில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரூரில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலி
Published on

போரூர்:

அரும்பாக்கம் ஜெய்நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பார்த்த சாரதி (வயது 55) செக்யூரிட்டி கிரைம் பிரிவு சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று போரூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் இரவு 8மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக போரூர் மார்க்கெட்டிற்கு சென்றபோது பார்த்தசாரதி தீடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் பார்த்த சாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com