விழுப்புரத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #dmkprotest
விழுப்புரத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம்:

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி விழுப்புரத்தில் புதுவை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வுமான ராதாமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், டாக்டர் முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர செயலாளர் (பொறுப்பு) சர்க்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகா மணி, கல்பர்ட் ராஜா, முருகன், ஜெயம் ரவி, வேம்பி ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் தயா இளந்திரையன், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, துணை அமைப்பாளர் அமர்ஜி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் வினோத், கல்வி தாளாளர் கோதகுமார், நகர துணை செயலாளர்கள் புருஷோத்தமன், ஜோதி பிரகாசம், தனலட்சுமி கார்டன் பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmkprotest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com