புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது

புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BusFareHike
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது
Published on

புதுச்சேரி:

புதுவையில் மாநில அரசுக்கு தனியாக பஸ் போக்குவரத்து கழகம் இருந்தாலும் இங்கு குறைவான பஸ்களே உள்ளன. இந்த பஸ்கள் பெரும்பாலும் புதுவை மாநிலத்துக்குள்ளேயே இயக்கப்படுகிறது.

புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்களே அதிக அளவில் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com