பட்டாக்கத்தியால் மாணவர்கள் கேக் வெட்டி ரகளை - தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் நூதன தண்டனை

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
பட்டாக்கத்தியால் மாணவர்கள் கேக் வெட்டி ரகளை - தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் நூதன தண்டனை
Published on

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ திருச்சி மாநகர போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று, பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டிய மாணவர்கள் யார்? என விசாரித்தனர். இதில் எம்.காம். 2-ம் ஆண்டு வகுப்பை சேர்ந்த 9 மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வீடியோ பதிவில் உள்ளதையும் ஒப்பிட்டு அவர்களை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவர்களை ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களது படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் போலீசார் நூதன தண்டனை அளித்தனர். அதன்படி 9 மாணவர்களையும் தோப்புக்கரணம் போடவைத்தனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தோப்புக்கரணம் போட்டதும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com