ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
Published on

சென்னை:

வளசரவாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அய்யப்பன்.

அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்க துரையிடம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தங்கதுரை பலமுறை இன்ஸ்பெக்டரை சந்தித்து தனது மோட்டார் சைக்கிளை விடுவிக்குமாறு கேட்டார்.

ஆனால் இன்ஸ்பெக்டர் என்ஜினீயரின் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி என்ஜினீயர் தங்கதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி இன்று காலை என்ஜினீயர் தங்கதுரையிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனை கைது செய்தனர்.

போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருவதால், அதை தடுக்க இ-செல்லான் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது நடைமுறையில் இருக்கும் வேளையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com