இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #BIMSTEC #Modi #MaithripalaSirisena
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
Published on

காத்மாண்டு:

வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

நேபாளம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTEC #Modi #MaithripalaSirisena

X

Maalai Malar
www.maalaimalar.com