இந்தியா-சீனா உறவுகளுக்கு சென்னை இணைப்பு உத்வேகத்தை சேர்க்கும்: மோடி பெருமிதம்

இந்தியா-சீனா உறவுகளுக்கு இந்த சென்னை இணைப்பு மேலும் உத்வேகத்தை சேர்க்கும் என சீன அதிபருடனான சந்திப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்
Published on

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com