

புதுடெல்லி:
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று புழுதி புயல் புரட்டி எடுத்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். உ.பி.யில் மட்டும் 65-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மணல் புயல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் கருணைத்தொகையாக வழங்க பிரதமர் மோடி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். #PM #exgratia #sandstormvictims