புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி - தமிழக அரசு வழக்கு தொடர முடிவு

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #Mullaperiyardam #TNGovernment
புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி - தமிழக அரசு வழக்கு தொடர முடிவு
Published on

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்னும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவு இத்தகைய புதிய அணை திட்ட ஆய்வுக்கு எதிரானவை. எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார். #Mullaperiyardam #TNGovernment

X

Maalai Malar
www.maalaimalar.com