அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கோவா திரும்பினார்

அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார். #ManoharParrikar #ReturnIndia
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கோவா திரும்பினார்
Published on

பனாஜி:

கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜூன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார்.

அதன்பின்னர், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார்.

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மனோகர் பாரிக்கருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கர் இன்று மாலை நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர் கோவா விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களை பார்ப்பதை தவிர்த்த அவர் நேராக வீட்டுக்கு சென்றார். #ManoharParrikar #ReturnIndia

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com