மனஅழுத்தத்தை தடுக்க மாணவ-மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
மனஅழுத்தத்தை தடுக்க மாணவ-மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தல், தேர்வில் தோல்வி அடைதல், கனவுகண்ட மேல்நிலை கல்வியை கற்க வாய்ப்பு இல்லாமல் போதல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு மாணவ-மாணவிகள் விபரீத சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தன்னம்பிக்கை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகி மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களோ, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை காணும் மற்றவர்களோ உடனடியாக 104 என்ற இலவச ஆலோசனை தொலைபேசி எண்ணிற்கும், கல்வித்துறையின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் தங்களின் அருகில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உதவிடலாம் என்ற கருத்துகளை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்து விளக்கி கூறினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com