ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியது பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு மூடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியது பாகிஸ்தான்
Published on

புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியது. சர்வதேச சமுதாயமும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தது.

இதனையடுத்து கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அரசு, தனது மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com