சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு நக்சலைட்டை சுட்டுக் கொன்றனர். #Encounter
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்தும் ஆர்ச்சா காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #Encounter

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com