லெபனான் நாட்டில் இந்திய தொழிலாளி சுட்டுக்கொலை

லெபனான் நாட்டில் உள்ளூர்வாசி ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
லெபனான் நாட்டில் இந்திய தொழிலாளி சுட்டுக்கொலை
Published on

பெய்ரூட்:

லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று காலை இந்திய தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர்வாசி ஒருவர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com