நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் - மத்திய மந்திரி பேட்டி

கிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் - மத்திய மந்திரி பேட்டி
Published on

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.
இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com