

சென்னை:
எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் பொருட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று பிரதமர் மோடி தமிழகத்தின் சமூகநீதி காத்திட முன்வர வேண்டும். மாணவர்கள் நலன் கருதி பிரதமர் இதில் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.