search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி
    X

    ஒடிசா கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி

    • பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மூலம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.
    • குமரி முதல் காஷ்மீர் வரை சென்ற 'பாரத் ஜோடோ யாத்திரை' முதல் கட்ட வெற்றியை அடைந்தது.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ஒடிசாவில் நடத்தி வருகிறார். முன்னதாக யாத்திரையை தொடங்கும் முன் ஒடிசா ரூர்கேலா சுந்தர்கர் நகரில் உள்ள வேத்வியாஸ் கோவிலுக்கு அவர் சென்றார். அங்கு தரையில் அமர்ந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அதன்பின் ரூர்கேலாவில் ராகுல் காந்தி யாத்திரை பயணத்தை தொடர்ந்தார்.

    பிரசார பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மூலம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.

    குமரி முதல் காஷ்மீர் வரை சென்ற 'பாரத் ஜோடோ யாத்திரை' முதல் கட்ட வெற்றியை அடைந்தது.

    2- வது கட்டமாக மக்களின் வேண்டுகோள்படி ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு போன்ற மாநிலங்களில் நடத்தப்படுகிறது. இந்த யாத்திரைக்கு மக்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.


    Next Story
    ×