இமாச்சல் முதல்வருக்கு வந்த சமோசாக்கள் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு சப்ளை: சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு- பா.ஜ.க.வின் ரியாக்ஷன்

சி.ஐ.டி, தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு.பிரபல ஓட்டலில் இருந்து வந்த சமோசாக்கள் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை.
இமாச்சல் முதல்வருக்கு வந்த சமோசாக்கள் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு சப்ளை: சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு- பா.ஜ.க.வின் ரியாக்ஷன்
Published on

இமாச்சல பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு வந்த சமோசாக்களை அவருடைய பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கியது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. இதை கிண்டல் செய்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 21-ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சி.ஐ.டி. தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி பிரபல ஓட்டலில் இருந்து 3 பெட்டிகளில் சமோசாக்கள் மற்றும் கேக் வந்துள்ளது. இந்த சமோசாக்கள் முதலமைச்சர் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்த இமாச்சல பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது இமாச்சல பிரதேச மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமோசா தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறித்து பா.ஜ.க. தலைமை செய்தி தொடர்பாளர் ரந்த்வீர் சர்மா "காங்கிரஸ் முதல்வரின் சமோசா குறித்து கவலைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி அக்கறை கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேச அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உண்மையில், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி., தொடர்பான நிகழ்ச்சிகளில், இதுபோன்ற ஒருங்கிணைப்பு பிரச்னையால், அரசு இயந்திரம் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com