

புதுச்சேரி காவல்துறை தனது குடும்பத்தின் வீட்டுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
பாஜக அரசின் உத்தரவின் பேரில் இந்த தொந்தரவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, புதுச்சேரி காவல்துறையினர் என் குடும்ப வீட்டிற்கு வந்து, அவர்களிடம் பலவிதமான விசாரணைகளை மேற்கொண்டனர்.
இவ்வாறு தொந்தரவு செய்வதற்கு யார் உத்தரவிட்டது, என்ன நோக்கத்திற்காக இது நடத்தப்பட்டது. இது தான் சட்ட நடைமுறையா?
புதுச்சேரியில் உள்ள பாஜக அரசு ஏன் என் குடும்பத்தை அச்சுறுத்துகிறது? இது புதுச்சேரி அரசின் குணம் அல்ல. இது மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் செய்யப்படுகிறது.
என்னை மிரட்டி அமைதியாக்குவதே நோக்கம் என்றால், அது பலிக்காது. இது என்னை அச்சுறுத்தி பணிய வைக்காது. காவல்துறையினர் குண்டர்களைப் போல செயல்படாமல், சட்டத்தை நிலைநாட்டும் ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் உறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது.
தலைமை நீதிபதியின் இரண்டு நாள் கூட்டத்திற்காக மகாராஷ்டிராவில் இருந்தபோது, சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, 15 முதல் 20 யூடியூபர்கள் மற்றும் ஊடக சேனல்கள் தனது தனியுரிமையை மீறி டெல்லியில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்தது.
அவர்கள் உள்ளிருந்து காட்சிகளைப் பதிவுசெய்து காண்பித்துக் கொண்டிருந்தனர். இது தனது குடும்பத்திற்கு ஒரு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.
முன்னதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, ஜந்தர் மந்தரரின் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார். அவர் கடந்த மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களைக் குறிப்பிட்டார்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஜந்தர்-மந்தர் அடுத்த அளவிலான போராட்டம் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
இன்று டெல்லியில் எங்கள் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் ஒரு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் யாரும் எங்களுக்கு வாடகைக்கு இடம் தரவில்லை. மேல் இடத்திலிருந்து அழுத்தம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது. அவர்களுடைய செயல்களும் வார்த்தைகளும், அவர்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
இதுபோன்ற அற்பமான செயல்கள் எங்களைப் பயமுறுத்திவிடும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் எங்களுக்கு தேசிய கவனத்தை ஈர்த்த போராட்டங்களைத் தாண்டியும், தற்போது சிஜேபி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, ஆகஸ்ட் 15 அன்று தங்களின் 'பள்ளியைச் சீராக்குங்கள்' பிரச்சாரத்தை சிஜேபி அமைப்பு தொடங்கும்.
சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமப்புறக் குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை,” என்று தீப்கே கூறினார்.