தெலுங்கானாவில் குழந்தைகளை இரவு 11 மணிக்கு மேல் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது- ஐகோர்ட் உத்தரவு

புஷ்பா 2 படத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதியின் மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானாவில் குழந்தைகளை இரவு 11 மணிக்கு மேல் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது- ஐகோர்ட் உத்தரவு
Published on

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அப்போது புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வந்திருந்தார்.

அந்த சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சமபவம் தொடர்பாக கைதான அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளியே உள்ளார்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று அம்மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com