தெலுங்கானாவில் ஒரே ஆண்டில் ரூ.40,209 கோடி மது விற்பனை

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2,700 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகி உள்ளது.
தெலுங்கானாவில் ஒரே ஆண்டில் ரூ.40,209 கோடி மது விற்பனை
Published on

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2025- 26-ம் நிதியாண்டில் ரூ.40 ஆயிரத்து 209 கோடிக்கு மது விற்பனையாகி சாதனைப்படைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு கடந்த ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு மது விற்பனையானது இதுவே முதல்முறை.

மதுபான கடை விண்ணப்பம் மூலம் ரூ.2,869 கோடியும், கடை வாடகை கட்டணம் மூலம் ரூ.1,771 கோடியும், 1214 மதுபான பார்கள் மூலம் ரூ.549 கோடியும் வருவாய் கிடைத்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2,700 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகி உள்ளது. 382.91 லட்சம் பெட்டி மதுபாட்டில்களும், 387.34 லட்சம் பெட்டி பீர்பாட்டில்களும் விற்பனையானது. கடந்த டிசம்பர் மாதம் அதிகபட்சமாக ரூ.5,051 கோடிக்கும், குறைந்தபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் ரூ.2,709 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com