ராகுல் காந்தி போதையில் பாராளுமன்றம் வருகிறாரா?- கங்கனா சர்ச்சை கருத்து

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை பற்றி ராகுல்காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும்.
Kangana Ranaut - Rahul Gandhi
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பாஜக-வின் சக்கரவியூகத்தை உடைத்து எறியும் காலம் விரைவில் வரும் என்றும் கூறினார்.

இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ராகுல்காந்தி பேச்சு குறித்து பாஜக எம்.பி.யும் இந்தி நடிகையுமான கங்கனா ரணாவத் கூறுகையில்,

ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை பற்றி ராகுல்காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும். ராகுல் காந்தி இப்படி பேசுவதை பார்க்கும்போது மது அல்லது போதை பொருளை பயன்படுத்தியவாறு பாராளுமன்றத்துக்குள் வருகிறாரா? என்று அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

அவரது கருத்து பலத்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com