உ.பி-ல் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு

39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Fake document
Published on

அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த ஜூன் 3-ந் தேதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது. உத்தரபிரதேச பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தவர்களில், யாருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் போலி என்று தெரிகிறதோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியது.

இதற்கிடையே, உத்தரபிரதேச பார் கவுன்சில், 105 வக்கீல்களுக்கு எதிராக பிரயாக்ராஜ் நகரில் உள்ள சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது.

பதிவு செய்து, வக்கீலாக பணியாற்றுவதற்கான சான்றிதழ் பெற்று வக்கீல் தொழில் செய்து வருவதாக புகாரில் கூறியுள்ளது.

புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலை சிவில் லைன்ஸ் இன்ஸ்பெக்டர் ராமாஷ்ரே யாதவ் தெரிவித்தார்.

மீதியுள்ள வக்கீல்கள் மீது ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com