search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீரில் AFSPA-ஐ திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை: அமித் ஷா
    X

    ஜம்மு-காஷ்மீரில் AFSPA-ஐ திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை: அமித் ஷா

    • ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப்பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
    • ஜம்மு-காஷ்மீர் சட்டம்-ஒழுங்கை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டம், இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த குலிஸ்தான செய்தி நிறுவனத்த்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப்பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீர் சட்டம்-ஒழுங்கை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். என்கவுண்டரின்போது ஜம்மு-காஷ்மீர் போலீசாரை முன்னிறுத்தி அவர்களை வலுப்படுத்தி வருகிறோம். மெதுமெதுவாக துருப்புகளை திரும்ப பெறப்படும். இதற்கான திட்டம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் ப்ளூ பிரின்ட் உருவாக்கியுள்ளோம்.

    ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து நிச்சயமாக பரிசீலனை செய்வோம். அங்குள்ள சூழ்நிலை சஜக நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த பரிந்துரையை விரைவாக பரிசீலனை செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் "பிடிபி கட்சி படிப்படியாக துருப்புகளை திரும்ப பெற வேண்டும். அதேவேளையில் ஆயுதப்படை சிறப்பு பிரிவு சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இது முக்கியத்துவம் பெறப்பட்டிருந்தது. தற்போது பா.ஜனதா முழு மனதோடு இதை ஏற்றுக்கொண்டுள்ளது" என்றார்.

    Next Story
    ×