

பீகார் மாநில அரசு செயல்படுத்தி வரும் மிகவும் பிரபலமான 'மாணவர் கடன் அட்டை திட்டத்தில்' கடன் நிதி உதவிக்கான வரம்பு ரூ. 4 லட்சத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளதாக பரவி வந்த தகவல்களை அம்மாநில உயர்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான நிதி ஆதாரங்களை விரிவுபடுத்தவே புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, கடன் தொகை குறைக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
முந்தைய விதிகளின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் வரையிலான முழு கடன் தொகையும் 'பீகார் மாநில கல்வி நிதிக் கழகம்' மூலமாக மட்டுமே நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின் கீழ், பீகார் மாநில கல்வி நிதிக் கழகம் மூலமாக நேரடியாக மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
வணிக வங்கிகள் மூலமாக மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். வங்கிகளை இத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கடன் வசதி சென்று சேரும் என கல்வித் துறை செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்கள் எளிதாகக் கல்விக்கடன் பெறும் வகையில் இத்திட்டம் 'பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம்' மற்றும் வணிக வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ரூ. 10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பீகார் அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. 2025-26 நிதியாண்டில் ரூ.886 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2026-27 நிதியாண்டிற்கு ரூ.950 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 64 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பது, அரசு இத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.