ஜெயலலிதா சிலை எடப்பாடியின் மனைவி போல் உள்ளது- நாஞ்சில் சம்பத் பேச்சு

சென்னையில் தலைமை கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை ஜெயலலிதா உருவம் போல் இல்லை என்று நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். #jayalalithastatue #edappadipalanisamy #nanjilsampath
ஜெயலலிதா சிலை எடப்பாடியின் மனைவி போல் உள்ளது- நாஞ்சில் சம்பத் பேச்சு
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கொள்கை பரப்பு இணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் தலைமை கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறந்து வைத்துள்ளார். அந்த சிலை ஜெயலலிதா உருவம் போல் இல்லை. சிலையின் கையில் 6 விரல்கள் உள்ளது. ஜெயலலிதா சிலையை தத்ரூபமாக வடிவமைக்காமல் அவசரத்தில் செய்துள்ளார்கள். அப்படி என்ன அவசரம் என்று தெரிய வில்லை?

ஜெயலலிதாவின் சிலை எடப்பாடி மனைவி மாதிரியே உள்ளதாக சமூக வலைய தளத்தில் வெளியாகி வருகிறது.

எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் ஆகியோரது சிலைகள் எல்லாம் கைதேர்ந்த சிற்பிகள் மூலம் எவ்வளவு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா சிலையை ஏன் இதுபோல் செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருக்கும் எந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அதை எல்லாம் எடப்பாடி அரசு ஆதரித்து வருகிறது. மத்திய அரசிடம் எடப்பாடியும் , ஓ.பி.எஸ்.சும் அடிமை போல் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும். டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அவர் நிச்சயம் முதல்- அமைச்சராக பதவி ஏற்பார்.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளின் போது தினகரன் தமிழகத்தின் முதல்- அமைச்சராக இருப்பார். ஜெயலலிதா வழியில் தமிழகத்தை வழிநடத்தி செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #jayalalithastatue #edappadipalanisamy #nanjilsampath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com