அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி.யிடம் மனு

காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து, அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி.யிடம் மனு அளித்தார்.
நளினி
நளினி
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமணத்திற்காக கடந்த 25-ந்தேதி பரோலில் வந்தார்.

அவரது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தற்போது வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் திராவிட இயக்க தமிழர் பேரவை பிரமுகர் வீட்டில் நளினி தங்கியுள்ளார்.

இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். போலீஸ் அனுமதியில்லாமல் அவர் வெளியில் எங்கும் செல்லக்கூடாது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி. பிரவேஷ்குமாரிடம் மனு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com