நாகூர் அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது

நாகூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர் அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பனங்குடி சன்னமங்கலம் ஓடை மேடு தெருவை சேர்ந்த ராஜு (வயது 30) அதே பகுதி செவ்வந்தி வீதி தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் தெரியவந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்

தொடர்ந்து வாழ ஒக்கூர் பகுதியில் நடத்திய சோதனையில் பாண்டி சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு தெரு ஆனந்தகுமார் (25) அதே பகுதி பெருக்கு தெருவைச் சேர்ந்த சுமன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com