

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் டோனி பங்கேற்க மாட்டார் எனவும், அவர் அடுத்த 2 மாதம் ராணுவத்தில் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் வரும் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் இணைந்து டோனி ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார். இதற்காக ராணுவ வீரர்களுடன் டோனி இணைந்தார்.
தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம் ஆகிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கின்றன. இதில் டோனி இருப்பாரா என கேட்கிறார்கள்.
ஆனால், அணியின் தேவைக்கேற்ப விளையாட, ரிஷப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். அவருக்கு அதிக நம்பிக்கையை கொடுப்பதற்காக செயல்பட உள்ளோம்' என கூறினார்.