

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சுஷ்மா மறைவின் காரணமாக டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பாஜக தலைவர்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதன்பின் மறைந்த முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜின் உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கட்சியினர் மரியாதை செலுத்த வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.