சிங்கம்புணரியில் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் மாதவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சிங்கம்புணரியில் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் மாதவன் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சிங்கம்புணரியில் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் மாதவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Published on

சிங்கம்புணரி:

தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மாதவன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த மாதவன் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 85.

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் மாதவன் பணியாற்றியவர் ஆவார்.

மாதவனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிங்கம்புணரிக்கு வந்தார். அவர் மாதவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பெரியகருப்பன் எம்.எல்.ஏ. மற்றும் தென்னவன் உள்பட முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மாதவனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாதவனின் இறுதிச்சடங்கு இன்று மாலை சிங்கம்புணரியில் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com