பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டதாகவும், அதன்மூலம் இந்தியாவை காப்போம் என்றும் கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #Mamata #AntiBJPRally #MKStalin
பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
Published on

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின. இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடிக்கு பயமாக உள்ளது. நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. அதன்மூலம் இந்தியாவை நாம் காப்போம். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும். மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல், நாம் வேறு வேறு மாநிலத்தவர்களாக இருந்தாலும் நமது நோக்கம் ஒன்றுதான். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com