தொண்டர்களின் எழுச்சி 6-ந்தேதி தெரியும்: முக அழகிரி

சென்னையில் 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri
தொண்டர்களின் எழுச்சி 6-ந்தேதி தெரியும்: முக அழகிரி
Published on

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த 30-வது நாளில் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அறிவித்தார்.

தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையிலும் ஈடுபட்டார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரி திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதனால் திட்டமிட்டப்படி 5-ந்தேதி அமைதி பேரணி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நேற்று நிருபர்களை சந்தித்த மு.க.அழகிரி, நான் தலைவரின் (கருணாநிதி) மகன். சொன்னதை செய்வேன்.

கோப்புப்படம்

X

Maalai Malar
www.maalaimalar.com