

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி அளவிற்கு பணம் புரண்டதாகவும் இதனால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், ஆளுநரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-
துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆளுநர் பன்வாரிலால் எதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.