மெரினா கடற்கரையில் 4 வயது சிறுவனிடம் சில்மி‌ஷம்- வாலிபர் கைது

சென்னை மெரினா கடற்கரையில் 4 வயது சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் 4 வயது சிறுவனிடம் சில்மி‌ஷம்- வாலிபர் கைது
Published on

சென்னை:

மெரினா கடற்கரை நடுக்குப்பத்தில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் கடற்கரையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

பார்த்திபன் தனது 4 வயது மகனுடன் காந்தி சிலை பின்புறம் கடற்கரை மணலில் தூங்குவது வழக்கம். அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்ற வாலிபரும் தூங்குவார்.

நேற்று இரவு திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த பார்த்திபன் கண்விழித்து பார்த்தபோது அருள், சிறுவனிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதுபற்றி பார்த்திபன் மெரினா போலீசில் புகார் செய்தார். போலீசார் அருளை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அருள் சில்மி‌ஷம் செய்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com