

இம்பால்:
இதுதவிர தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்கள், ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ஆகியோர் பாஜக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். மொத்தம் 9 எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்துள்ளதால் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ ஷியாம்குமார் சிங் பாஜகவுக்கு தாவியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டமன்றத்தின் பலம் 59 ஆக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.